தென்மேற்குப் பருவ மழை: 175 நாள்களுக்குப் பிறகு 100 அடியைத் தாண்டியது பாபநாசம் அணை நீர்மட்டம்

மேற்குத் தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் 10 நாள்களாகப் பெய்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. 175 நாள்களுக்குப் பின் பாபநாசம் அணை 100 அடியைத் தாண்டியுள்ளது.
தென்மேற்குப் பருவ மழை: 175 நாள்களுக்குப் பிறகு 100 அடியைத் தாண்டியது பாபநாசம் அணை நீர்மட்டம்
Published on

நெல்லை,

நெல்லை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையில் பிரதானமான பாபநாசம் அணை, சேர்வலாறு அணை, மணிமுத்தாறு அணை உள்ளிட்ட அணைகள் உள்ளன. தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் அணைகளுக்கு நீர்வரத்து அதிகம் இருக்கும்.

இந்த ஆண்டு தென்மேற்குப் பருவ மழை ஜூன் 2ஆம் வாரத்தில் தொடங்கிய நிலையில் போதிய மழை இல்லாமல் இருந்தது. அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 2 ஆம் தேதியில் இருந்து தென்மேற்குப் பருவ மழைத் தீவிரமடைந்ததையடுத்து நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை அதிகம் பெய்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் 143 அடி நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையில் நீர்மட்டம் கடந்த பிப்ரவரி. 19 இல் 100.70 அடியாக இருந்தது. அதையடுத்து தென்மேற்குப் பருவ மழைத் தீவிரமடைந்த நிலையில் 175 நாட்கள் கழித்து அணையின் நீர்மட்டம் இன்று 100.65 அடியாக உள்ளது.

அணைக்கு நீர்வரத்து நீர்வரத்து 3036.23 அடியாகவும் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 804.75 அடியாகவும் உள்ளது. கடந்த 10 நாள்களாகப் பெய்த மழையால் அணைகள் நிரம்பியதையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பிசான சாகுபடிக்கான பணிகளை தொடங்கியுள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் இன்று காலை 7 மணி வரையுள்ள 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு: கடனாநதி 7 மி.மீ., குண்டாறு 13 மி.மீ., அடவிநயினார் 2 மி.மீ., செங்கோட்டை., 3 மி.மீ ஆக பதிவாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com