

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சிறுமி கொலை (குற்ற எண்: 118/2026) வழக்கில் இரவு பகல் பாராமல் நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட குற்றவாளியை கண்டறிந்து போலீசார் கைது செய்தனர்.
குற்றவாளியை கைது செய்து சிறப்பாக பணியாற்றிய தூத்துக்குடி டி.எஸ்.பி.க்கள் சுனில், சுதீர், சுந்தரபாண்டியன், ஜெகநாதன், பயிற்சி ஏ.எஸ்.பி. ராகுல் V கோபால், பயிற்சி டி.எஸ்.பி. சுரேஷ், தூத்துக்குடி மாவட்ட இயங்கும் தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குநர் கலாலெட்சுமி மற்றும் 11 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் என 116 போலீசாருக்கு தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன், மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் வைத்து நற்பணி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.