

சென்னை,
தமிழக ரேஷன் கடைகளில் முன்னுரிமை, அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்களின், 'ஆதார்' சரிபார்ப்பு வாயிலாக, உண்மை தன்மையை உறுதி செய்வதற்கான விரல் ரேகை பதிவு செய்யும் பணி நடக்கிறது.
இன்னும் எட்டு லட்சம் உறுப்பினர்கள் விரல் ரேகை பதிவு செய்யவில்லை. அவர்களுக்காக, வரும், 8, 9ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
இதை பயன்படுத்தி, இதுவரை விரல் ரேகை பதிவு செய்யாத ரேஷன் கார்டுகளில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் பதிவு செய்து கொள்ளுமாறு, உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது.