தூத்துக்குடி பனிமய மாதா கோவிலில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி; கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்தனை

பனிமய மாதா கோவிலில் நடைபெறும் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
தூத்துக்குடி பனிமய மாதா கோவிலில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி; கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்தனை
Published on

தூத்துக்குடி,

உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு கிறிஸ்தவ மக்கள் தங்கள் வீடுகளை வண்ண விளக்குகளால் அலங்கரித்து, இனிப்புகளை பகிர்ந்து, தேவாலயங்களில் நடைபெறும் சிறப்பு பிரார்த்தைனைகளில் கலந்து கொண்டு இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தைனைகள் நடைபெற்று வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பனிமய மாதா கோவிலில், பங்குத்தந்தை குமாரராஜா தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டு பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தூத்துக்குடி பனிமய மாதா கோவிலில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com