கமலக்கண்ணி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

நவராத்திரி நிறைவு விழாவில் கமலக்கண்ணி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
கமலக்கண்ணி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
Published on

கலவையில் உள்ள கமலக்கண்ணி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்றது. தினமும் கமலக்கண்ணி அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் ஆகியவை நடைபெற்று வந்தது. 10-வது நாளான நேற்று நடைபெற்ற சிறப்பு பூஜையில் பல்வேறு வண்ண மலர்களால் கமலக்கண்ணி அம்மனை ஊஞ்சலில் அமரவைத்து பூ மாலை, தங்க ஆபரணங்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதில் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com