சிறப்பு கிராம சபை கூட்டம்

திருவாடானை யூனியனில் உள்ள 47 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
சிறப்பு கிராம சபை கூட்டம்
Published on

தொண்டி

திருவாடானை யூனியனில் உள்ள 47 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சமூகத் தணிக்கை அறிக்கை வாசிக்கப்பட்டு கிராம சபையில் ஒப்புதல் பெறப்பட்டது. இதில் ஊராட்சி தலைவர்கள் சமூகத் தணிக்கை குழுவினர், ஊராட்சி துணைத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், சுய உதவி குழு கூட்டமைப்பு மற்றும் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஸ்வரி, செந்தாமரைச்செல்வி ஆகியோர் தலைமையில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கிராம சபை கூட்டங்களை நேரில் ஆய்வு செய்தனர்.

பணஞ்சாயல் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு புதுகுடி வருசத்துரை தலைமை தாங்கினார். வட்டார பயிற்றுனர் விஜயகுமார் தலைமையிலான சமூக தணிக்கை குழுவினர், ஊராட்சி தலைவர் மோகன்ராஜ், செயலாளர் முத்து கண்ணன், துணைத் தலைவர் சுந்தர வடிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சமூகத் தணிக்கை அறிக்கை வாசிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com