கூட்ட நெரிசல் சம்பவம்: கரூரில் 3 இடங்களில் முகாமிட்டு சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை


கூட்ட நெரிசல் சம்பவம்: கரூரில் 3 இடங்களில் முகாமிட்டு சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை
x

கரூரில் 3 இடங்களில் முகாமிட்டு சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர்,

கரூரில் நடைபெற்ற த.வெ.க. பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதொடர்பாக வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் கடந்த 5-ந் தேதி முதல் கரூர் தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த குழுவினர் 3 வெவ்வேறு குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அரசு சுற்றுலா மாளிகையில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வந்த சிறப்பு புலனாய்வு குழுவினர் தற்போது 3 இடங்களில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதன்படி தாந்தோணிமலை அரசு சுற்றுலா மாளிகை, அரசு சுற்றுலா மாளிகைக்கு அருகே உள்ள அரசுக்கு சொந்தமான கட்டிடம், கரூர் மாவட்டம் புகழூரில் உள்ள டி.என்.பி.எல். வளாகம் ஆகிய 3 இடங்களில் சிறப்பு புலனாய்வு குழுவினர் முகாமிட்டு விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர்கள் 7 பேர் ஆஜரான நிலையில், நேற்று மீதமுள்ள 3 பேரும் ஆஜரானார்கள். அவர்களிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி முடித்ததாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர். இதற்கிடையில் சிறப்புக்குழு விசாரணைக்கு எதிராக தவெக தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.

1 More update

Next Story