பிரதோஷத்தையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை

பிரதோஷத்தையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
பிரதோஷத்தையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை
Published on

கள்ளக்குறிச்சி ஏமப்பேரில் அமைந்துள்ள விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதோஷ பூஜை நடைபெற்றது. இதையொட்டி நந்தீஸ்வரருக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர் அலங்காரத்தில் நந்தி பெருமான் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் சங்கராபுரம் முதல் பாலமேடு காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரர், மணிமங்களநாயகி சமேத சங்கரலிங்கேஸ்வரர் கோவில், அ.பாண்டலம் அமிர்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com