சிறப்பு பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்

சிறப்பு பொது வினியோக திட்ட குறைதீர் முகாம் 4 கிராமங்களில் நாளை நடக்கிறது.
சிறப்பு பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்
Published on

பெரம்பலூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும் சிறப்பு பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்கள் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. அதன்படி முகாம் நடைபெறும் கிராமங்கள் விவரம் பின்வருமாறு:-

பெரம்பலூர் தாலுகாவிற்கு க.எறையூர் கிராமத்தில் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி தலைமையிலும், வேப்பந்தட்டை தாலுகாவிற்கு பெரியவடகரை கிராமத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சிவசங்கரன் தலைமையிலும், குன்னம் தாலுகாவிற்கு எழுமூர் (மேற்கு) கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சத்திய பால கங்காதரன் தலைமையிலும், ஆலத்தூர் தாலுகாவிற்கு ஆதனூர் (தெற்கு) கிராமத்தில், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சரவணன் தலைமையிலும் முகாம் நடைபெற உள்ளது. முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயனடையலாம், என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் தொவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com