தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்துக்கு 19-ம்தேதி சிறப்பு ரெயில் இயக்கம்

வருகிற 19-ம்தேதி தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்துக்கு 19-ம்தேதி சிறப்பு ரெயில் இயக்கம்
Published on

சென்னை,

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காகவும் வருகிற 19-ம்தேதி தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இந்த தூத்துக்குடி-தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரெயிலானது (ரெயில் எண் 06168) வருகிற 19-ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.25 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (15-ம்தேதி) காலை 8 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி-தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரெயில் தூத்துக்குடி மேலூர், வாஞ்சி மணியாச்சி, கடம்பூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், மதுரை, சோழவந்தான், திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஶ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com