சென்னை- நெல்லை இடையே சிறப்பு ரெயில் இயக்கம்

பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னை- நெல்லை இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
Published on

நெல்லை,

கோடை விடுமுறையையொட்டி, பெரும்பாலானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். குறிப்பாக சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அதிக அளவு மக்கள் படையெடுப்பார்கள். அவர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் மற்றும் ரெயில்கள் இயக்கப்படும்.

இந்த நிலையில், கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரெயில்களை தென்னக ரெயில்வே அறிவித்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் வாரம் தோறும் வியாழக்கிழமை சென்னை எழும்பூரில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 8.30 மணிக்கு நெல்லை சென்றடையும்.

மறுமார்க்கத்தில் வெள்ளிக் கிழமைகளில் நெல்லையில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 7 மணிக்கு எழும்பூர் வந்தடையும். இந்த ரெயில், விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக் கோட்டை, விருதுநகர் வழியாக செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com