தாம்பரம்-செங்கோட்டை இடையே இன்று சிறப்பு ரெயில் இயக்கம்

குடியரசு தின விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தாம்பரம்-செங்கோட்டை இடையே இன்று சிறப்பு ரெயில் இயக்கம்
Published on

திருச்சி,

குடியரசு தின விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தாம்பரம்-செங்கோட்டை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. வண்டி எண் 06137/06138 தாம்பரம்-செங்கோட்டை சிறப்பு ரெயில் இன்று (சனிக்கிழமை) இரவு 11.50 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.40 மணிக்கு செங்கோட்டையை சென்றடையும்.

இதே ரெயில் மறுமார்க்கத்தில் வண்டி எண் 06138 செங்கோட்டை-தாம்பரம் சிறப்பு ரெயில் 26-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 3 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும். இந்த ரெயில் செங்கல்பட்டு, விருத்தாசலம், அரியலூர், திருச்சி, மதுரை, விருதுநகர், ராஜபாளையம், கடையநல்லூர், தென்காசி ஆகிய வழித்தடங்கள் வழியாக செல்லும். இந்த தகவலை திருச்சி ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com