

திருக்கடையூர்:
திருக்கடையூரில் சீரடி சாய்பாபா கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று வியாழக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக சாய்பாபாவுக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு பழங்கள், இனிப்புகள் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அமிர்த சாய் அறக்கட்டளை மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.