பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டி

சர்வதேச நீதி தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடந்தது.
பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டி
Published on

ஊட்டி

சர்வதேச நீதி தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ஊட்டியில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பேச்சு போட்டி நேற்று முன்தினம் நடந்தது. இதற்கு மாவட்ட நீதிபதி அப்துல் காதர் தலைமை தாங்கினார். இதில் ஊட்டி, குன்னூர், கூடலூர் பகுதிகளை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் இருந்து 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு, போக்சோ சட்டம், குழந்தை திருமணம் ஆகிய தலைப்புகளில் போட்டி நடந்தது. போட்டியில் ஊட்டி அன்னை சத்தியா காப்பக மாணவி பூர்ணஸ்ரீ முதலிடம், தூனேரி அரசு பள்ளி மாணவி திலகம் 2-ம் இடம், கூடலூர் அரசு மாதிரி பள்ளி மாணவி அனீஸ் பாத்திமா 3-வது இடத்தை பிடித்தனர். முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு முறையே ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000-த்திற்கான காசோலை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதில் சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான லிங்கம், நீலகிரி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மகாதேவன், செயலாளர் சிவக்குமார், வக்கீல்கள் விஜயன், பாலநந்தகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com