நெடுந்தீவு பகுதியில் ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் கைது - எல்லை தாண்டி மீன் பிடித்த‌தாக இலங்கை கடற்படை நடவடிக்கை

நெடுந்தீவு பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்த‌தாக ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
நெடுந்தீவு பகுதியில் ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் கைது - எல்லை தாண்டி மீன் பிடித்த‌தாக இலங்கை கடற்படை நடவடிக்கை
Published on

ராமேஸ்வரம்,

ராமேஸ்வரம் மீனவர்கள் நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 14 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஒரு படகு பறிமுதல் செய்யப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை பகுதியில் மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் இந்த நடவடிக்கையை எடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட 14 பேரை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என மீனவர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com