இலங்கை கடற்படையின் அத்துமீறல் இனியும் நீடிக்கக்கூடாது - ஜி.கே.வாசன்

இலங்கை கடற்படையின் அத்துமீறல் இனியும் நீடிக்கக் கூடாது என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இலங்கை கடற்படையின் அத்துமீறல் இனியும் நீடிக்கக்கூடாது - ஜி.கே.வாசன்
Published on

சென்னை,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இலங்கை கடற்படையினர் ஒரு விசைப்படகை சுற்றி வளைத்து படகையும், அதிலிருந்த 14 மீனவர்களையும் சிறைப்பிடித்துச் சென்றனர். மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல், சிறைப்பிடித்தல், படகுகளை பறிமுதல் செய்தல் இன்னும் நீடிக்கிறது.

இது இலங்கை கடற்படையினரின் அத்துமீறல். இந்நிலை இனியும் நீடிக்கக் கூடாது என்பது தான் த.மா.கா வின் எதிர்பார்ப்பாகும். மத்திய அரசு உடனடியாக இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டு கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 14 மீனவர்களையும், விசைப்படகையும் மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com