எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

மீனவர்களை கைது செய்ததோடு மீன்பிடி படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
Published on

ராமநாதபுரம்,

தனுஷ்கோடியைச் சேர்ந்த மீனவர்கள் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் பகுதியில் இருந்து மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் தனுஷ்கோடி தலைமன்னார் இடையே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை கைது செய்தனர். அவர்களின் மீன்பிடி படகையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட மீனவர்களை விசாரணைக்காக இலங்கைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com