2 மாத கைக்குழந்தையுடன் அகதிகளாக தமிழகம் வந்த இலங்கை தமிழர்கள்

இலங்கை, வவுனியா பகுதியிலிருந்து இரண்டு மாத கைக்குழந்தையுடன் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர்.
2 மாத கைக்குழந்தையுடன் அகதிகளாக தமிழகம் வந்த இலங்கை தமிழர்கள்
Published on

ராமநாதபுரம்,

இலங்கையில் வரலாறு காணாத பெருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பெருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அவற்றின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ளது. இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

உணவுகூட கிடைக்காமல் ஏராளமானேர் திண்டாடுகின்றனர். அரசுக்கு எதிராக மக்கள் தெருவில் இறங்கி பேராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, உணவுப் பஞ்சத்தால் தமிழ் குடும்பங்களைச் சேர்ந்த பலர் அகதிகளாக தமிழகத்துக்கு வரத் தெடங்கியுள்ளனர். ஏற்கனவே பல குடும்பங்கள் ராமேசுவரத்துக்கு வந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் இலங்கை, வவுனியா பகுதியிலிருந்து இரண்டு மாத கைக்குழந்தையுடன் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அகதிகளாக தமிழகம் வந்தடைந்துள்ளனர். இலங்கையில் இருந்து இதுவரை 20 க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த இலங்கை தமிழர்கள் தமிழகம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com