தேங்கி நிற்கும் கழிவுநீர்

தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
Published on

அரியலூர் மாவட்டம் செந்துறை சிவன் கோவில் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் வீடுகளில் வெளியேறும் கழிவுநீர் செல்ல முறையான வடிகால் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் சாலைகளில் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com