சென்னையில் நாளை 11 வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

சென்னை மாநகரில் 11 வார்டுகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற உள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை (4.09.2025) 11 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை (4.9.2025) திருவொற்றியூர் மண்டலம் (மண்டலம்-1), வார்டு-1ல் கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள கத்திவாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானம், மாதவரம் மண்டலம் (மண்டலம்-3), வார்டு-24ல் புனித அந்தோணி நகர் ஜி.என்.டி. சாலையில் உள்ள தியா கல்யாண மண்டபம், தண்டையார்பேட்டை மண்டலம் (மண்டலம்-4), வார்டு-38ல் தண்டையார்பேட்டை, பட்டேல் நகர் சென்னை உயர்நிலைப் பள்ளி, ராயபுரம் மண்டலம் (மண்டலம்-5), வார்டு-62ல் சிந்தாதிரிப்பேட்டை, அருணாச்சலம் சாலையில் உள்ள மே தின விளையாட்டு மைதானம், திரு.வி.க. நகர் மண்டலம் (மண்டலம்-6), வார்டு-64ல் ஸ்ரீநிவாசன் நகரில் உள்ள பழைய பள்ளிக் கட்டடம்,
அம்பத்தூர் மண்டலம் (மண்டலம்-7), வார்டு-85ல் உள்ள டன்லப் கிரவுண்ட், அண்ணாநகர் மண்டலம் (மண்டலம்-8), வார்டு-105ல் அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலனியில் உள்ள முகமது சதக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தேனாம்பேட்டை மண்டலம் (மண்டலம்-9), வார்டு-126ல் மந்தைவெளி, கேனல் பங்க் சாலை, அல்போன்சா விளையாட்டு மைதானத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்கம், அடையாறு மண்டலம் (மண்டலம்-13), வார்டு-168ல் கிண்டி, லேபர் காலனி, அருளயம்மாபேட்டை பிரதான சாலையில் உள்ள லயன்ஸ் கிளப் தொடக்கப்பள்ளி, பெருங்குடி மண்டலம் (மண்டலம்-14), வார்டு-184ல் அம்பேத்கர் நகர், பரணி தெரு, எம்.ஜி.ஆர். சாலையில் உள்ள நாகம்மை அடிகளார் பள்ளி, சோழிங்கநல்லூர் மண்டலம் (மண்டலம்-15), வார்டு-197ல் பனையூர், குடுமியாண்டி தோப்பு பள்ளி பிரதான சாலையில் உள்ள சுனாமி கட்டட பள்ளி வளாகம் ஆகிய 11 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






