வேடந்தாங்கல் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

வேடந்தாங்கல் மற்றும் பள்ளிக்கரணை பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.
வேடந்தாங்கல் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
Published on

செங்கல்பட்டு,

தமிழகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி வருடந்தோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பின்னர் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான பறவைகள் கணக்கெடுப்பு நீர்பறவைகள், நிலப்பறவைகள் என இரண்டு பரிவாக நடைபெறுகிறது.

இதில் நீர்பறவைகளின் கணக்கெடுப்பு நேற்று (28-ந்தேதி) தொடங்கியது. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், நீர்நிலைப் பகுதிகள் மற்றும் பறவைகள் தங்கக் கூடிய பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.

இதேபோல் பள்ளிக்கரணை பகுதியிலும் பறவைகள் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் மட்டும் 9 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இதில் பறவை ஆர்வலர்கள், மாணவர்களும் பங்கேற்று கணக்கெடுத்து வருகின்றனர். நிலப்பறவைகளின் கணக்கெடுப்புபணி மார்ச் மாதம் 4-ந்தேதி மற்றும் 5-ந்தேதிகளில் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com