மாநில அளவிலான கராத்தே, யோகா போட்டி

சோளிங்கர் அருகே மாநில அளவிலான கராத்தே, யோகா போட்டி நடைபெற்றது.
மாநில அளவிலான கராத்தே, யோகா போட்டி
Published on

சோளிங்கர் அடுத்த பில்லாஞ்சியில் ஷோபுகாய்சிட்டோரியோ கராத்தே பயிற்சி பள்ளி சார்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு மாநில அளவிலான கராத்தே, சிலம்பம், யோகா சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. ஷோபுகாய்சிட்டோரியோ கராத்தே பயிற்சி பள்ளி தலைமை பயிற்சியாளர் மாரிமுத்து தலைமை தாங்கினார். இதில் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர். பல்வேறு பிரிவுகளில் போட்டி நடைபெற்றது.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது. கராத்தே, சிலம்பம், யோக தலைமை பயிற்சியாளர்கள் கார்த்தி, பிச்சைமுத்து, சரவணன், வாலாஜா வாசுதேவன், சுரேஷ், ராஜசேகர் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பயிற்சியாளர் ரேவதி நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com