மாநில அளவிலான யோகா போட்டியில் மாணவ-மாணவிகள் சாதனை

மாநில அளவிலான பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்ற யோகாசனப்போட்டி, திருப்பூர் ராக்கியாபாளையம் அருகில் உள்ள ஐ வின் டிராக் ஸ்போர்ட்ஸ் கிளப் உள் அரங்கத்தில் நடைபெற்றது.
மாநில அளவிலான யோகா போட்டியில் மாணவ-மாணவிகள் சாதனை
Published on

சாவித்திரி அம்மாள் நினைவு முதலாமாண்டு மாநில அளவிலான பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்ற யோகாசனப்போட்டி, திருப்பூர் ராக்கியாபாளையம் அருகில் உள்ள ஐ வின் டிராக் ஸ்போர்ட்ஸ் கிளப் உள் அரங்கத்தில் நடைபெற்றது. போட்டியில் காரைக்குடி கல்லூர் மலர் குரூப் கம்பெனிஸ் மேலாண்மை இயக்குனர் பி.எல்.படிக்காசு, நல்லூர் சரக உதவி போலீஸ் கமிஷனர் நந்தினி, 58-வது வார்டு கவுன்சிலர் காந்திமதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தனர். ஐ வின் டிராக் ஸ்போர்ட்ஸ் கிளப் நிறுவனர் அழகேசன் தலைமை தாங்கினார். பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட முத்தணம்பாளையம் பாசன தலைவர் மணி, போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், தொழிலதிபர்கள் சந்தீப்குமார், ஜெயபிரகாஷ், வெங்கடேசன், நிரஞ்சன்-ஆறுமுகம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.

இந்த போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து 400-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். ஜெனரல், அட்வான்ஸ், ஸ்பெஷல், சாம்பியன் என 4 பிரிவுகளாக போட்டிகள் நடந்தன. தமிழ்நாடு பசிபிக் யோகா அசோசியேசன் செயலாளர் ஸ்ரீதர், திருப்பூர் மாவட்ட யோகா அசோசியேசன் செயலாளர் நந்தகுமார் ஆகியோர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட நடுவர்கள் போட்டிகளை நடத்தினர். பரிசளிப்பு நிகழ்ச்சியில் டெக்கான் மதிவாணன், அபிராமி கலர் வெங்கடேஷ்,வாஸ்து நிபுணர் மோகனகிருஷ்ணா மற்றும் வர்ம சிகிச்சை நிபுணர் சாந்தகுமார் ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com