தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்த கல்குவாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்

அரசு தரப்பில் அமைச்சர் துரைமுருகன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்த கல்குவாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்
Published on

சென்னை,

தமிழ்நாடு கல்குவாரி கிரசர், எம்.சாண்ட் உரிமையாளர் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், கடந்த ஜூன் 27-ந்தேதியில் இருந்து தமிழகத்தில் உள்ள 2 ஆயிரம் கல்குவாரிகள், 5 ஆயிரம் கிரசர் மற்றும் டிப்பர் லாரிகளின் உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8 நாட்களாக போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், கிரசர் ஜல்லி மற்றும் கல்குவாரி உரிமையாளர்களிடம் அரசு தரப்பில் அமைச்சர் துரைமுருகன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com