நாகர்கோவிலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவிலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாகர்கோவிலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

நாகர்கோவில், 

நாகர்கோவிலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம்

நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு எஸ்.டி.பி.ஐ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சத்தார் அலி தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர் மைதீன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

முன்பு நடந்த போரின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்த நிலையில் தற்போது இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளது. இதனை கண்டித்தும், பாலஸ்தீனத்திற்கு இந்தியா ஆதரவு அளிக்கக்கோரியும், உலக நாடுகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தலையிட்டு சுமூகமாக பிரச்சினையை தீர்க்க வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதில் மணவை சாதிக், மாவட்டத் துணைத் தலைவர் ஜாகிர் உசேன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மீரான் மைதீன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com