நாகர்கோவிலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவிலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாகர்கோவிலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

நாகர்கோவில், 

நாகர்கோவிலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சத்தார் அலி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜகபர் அலி வரவேற்று பேசினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com