அதிமுக தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு..!

அதிமுக தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு..!
Published on

சென்னை,

அ.தி.மு.க. பெதுக்குழு நேற்று வானகரத்தில் நடைபெற்ற நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு..க தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பெரிய கலவரமாக மாறியது. இதையடுத்து, போலீசார் கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

அதன் பின்னர் வருவாய்த்துறை அதிகாரிகள் கட்சி அலுவலகத்துக்குள் நுழைந்தனர். பின்னர் அ.தி.மு.க. அலுவலகத்தை சீல் வைக்கும் நடவடிக்கையில் இறங்கினர். அலுவலகத்தின் பின்பக்க கதவு, முன்பக்க கதவு, முன்பக்க நுழைவுவாயில் கதவு ஆகியவற்றை இழுத்து மூடி சீல் வைத்தனர். பின்னர் போலீசார் தடுப்புகளை அமைத்து அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், இருதரப்பு மோதல் காரணமாக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் 70-க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக அலுவலகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com