விஷம் குடித்து மாணவர் தற்கொலை

திண்டுக்கல் அருகே கல்லூரி முன்பு விஷம் குடித்து மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
விஷம் குடித்து மாணவர் தற்கொலை
Published on

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்த மூனாண்டிபட்டியை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகன் துளசிமணி (வயது 20). இவர், திண்டுக்கல் பழைய கரூர் சாலையில் என்.எஸ்.நகர் அருகே உள்ள தனியார் கலைக் கல்லூரியில் பி.ஏ. தமிழ் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி கல்லூரிக்கு துளசிமணி காலதாமதமாக வந்ததாக தெரிகிறது. இதனால் அவரது அடையாள அட்டையை வாங்கி வைத்துக்கொண்டு, பெற்றோரை அழைத்து வருமாறு கூறி கல்லூரி நிர்வாகம் திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த துளசிமணி கல்லூரிக்கு அருகே உள்ள கடைக்கு சென்று எலியை கொல்வதற்கான விஷ மருந்தை வாங்கி வந்தார். பின்னர் கல்லூரி நுழைவுவாயில் முன்பு அவர், அந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். உடனே கல்லூரி நிர்வாகத்தினர் அவரை ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அங்கு சிகிச்சை பலனில்லாமல் இறந்தார். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com