புதுச்சத்திரம் அருகே நீரில் மூழ்கி மாணவி பலி

புதுச்சத்திரம் அருகே நீரில் மூழ்கி மாணவி உயிரிழந்தாள்.
புதுச்சத்திரம் அருகே நீரில் மூழ்கி மாணவி பலி
Published on

சிதம்பரம்,

புதுச்சத்திரம் அருகே உள்ள கீழ்பூவாணிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகள் அஞ்சலி (வயது 12). இவள் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள். சம்பவத்தன்று மாணவி, அதே பகுதியில் உள்ள பெருமாள் ஏரி வடிகால் வாய்க்காலில் குளிப்பதற்காக சென்றாள். அப்போது அவள் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தாள். இதுகுறித்த புகாரின்பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com