மாணவிக்கு பாலியல் தொல்லை: பங்குத்தந்தை போக்சோ சட்டத்தில் கைது

தூத்துக்குடியில் ஒரு ஆலயத்தின் பங்குத்தந்தையாக இருப்பவர், ஆலயத்தில் பயிற்சி பெற வந்த 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
மாணவிக்கு பாலியல் தொல்லை: பங்குத்தந்தை போக்சோ சட்டத்தில் கைது
Published on

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள ஒத்தாசை மாதா ஆலயத்தின் பங்குத்தந்தையாக இருப்பவர் பன்னீர்செல்வம் (வயது 69). இவர் ஆலயத்தில் பயிற்சி பெற வந்த 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீசார் பன்னீர்செல்வம் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com