

சென்னை
வேலூர் மாவட்டம் அடுக்கும்பாறை என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் சென்னையில் இயங்கி வரும் அரசு கவின் கலைக் கல்லூரியில் செராமிக் (சுடுமண்) துறையில் இறுதியாண்டு படித்துவந்தார்.
சொந்த ஊரான வேலூர் சென்றிருந்த பிரகாஷ், நேற்றிரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். `எனது சாவுக்கு துறைத்தலைவர் (H.O.D) மட்டுமே காரணம் என்று 4 பக்க கடிதம் எழுதி வைத்துவிட்டுத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இதைத் தொடர்ந்து கவின் கலைக் கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.