கரடி தாக்குதல் சம்பவம் எதிரொலிபள்ளி முடிந்து மாணவர்களை அழைத்து சென்ற வனத்துறையினர்

கரடி தாக்குதல் சம்பவம் எதிரொலிபள்ளி முடிந்து மாணவர்களை அழைத்து சென்ற வனத்துறையினர்
Published on

சேந்தமங்கலம்:

கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம் வாழவந்தி நாடு ஊராட்சி கரையங்காடுபட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கூடத்தில் இருந்து சற்று தூரத்தில் தான் நேற்று முன்தினம் கொல்லிமலையை சேர்ந்த 2 பேரை உணவு தேடி வந்த கரடி ஒன்று தாக்கிவிட்டு தப்பி ஓடியது.

இந்த நிலையில் நேற்று மாலை பள்ளிக்கூடம் முடிந்ததும் மாணவர்கள் பாதுகாப்பாக வீடு செல்வதற்காக பள்ளியில் இருந்து குறிப்பிட்ட எல்லை வரை வனத்துறை அலுவலர்கள் அழைத்து சென்று விட்டு வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com