

அரியலூர்,
4 விளையாட்டுகளை 40 நிமிடங்கள் விளையாடி உலக சாதனையை மாணவர்கள் முறியடித்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தழுதாழைமேடு தனியார் பள்ளியில் நடைபெற்ற பாரம்பரிய விளையாட்டு நிகழ்வில், பல மாவட்டங்களைச் சேர்ந்த இருநூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சிலம்பம், கராத்தே, ஸ்கேட்டிங், யோகா ஆகிய நான்கு போட்டிகளில் ஒரே நேரத்தில் சுமார் நாற்பது நிமிடங்கள் பங்கேற்று சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.
இதன்மூலம் முந்தைய முப்பது நிமிட சாதனையை முறியடித்து புதிய உலக சாதனையை பதிவு செய்த நிலையில், பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.