மின்சார ரெயில்கள் திடீர் ரத்து: தெற்கு ரெயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்

பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
மின்சார ரெயில்கள் திடீர் ரத்து: தெற்கு ரெயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்
Published on

சென்னை,

சென்னை மக்களின் முக்கிய போக்குவரத்து சேவையாக மின்சார ரெயில் மற்றும் மெட்ரோ ரெயில் சேவை இருந்து வருகிறது. இதனிடையே, பராமரிப்பு பணிகள் காரணமாக முழுமையாகவோ அல்லது பகுதி நேரமாகவோ மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன, அல்லது வழித்தடங்கள் மாற்றப்படுகின்றன. அந்த வகையில், தெற்கு ரெயில்வே நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

* சென்னை சென்டிரலில் இருந்து இரவு 11.15 மணிக்கு திருவள்ளூர் புறப்படும் மின்சார ரெயில் பராமரிப்புப் பணியால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

* சென்னை சென்டிரலில் இருந்து இரவு 11.40 மணிக்கும், நள்ளிரவு 12.15 மணிக்கும் ஆவடி புறப்படும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

* திருவள்ளூரில் இருந்து இரவு 10.15 மணிக்கு ஆவடி புறப்படும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மின்சார ரெயில்கள் ரத்து தொடர்பான முழு விபரம்:-

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com