தஞ்சையில் திடீர் மழை

தஞ்சையில் திடீரென மழை பெய்தது.
தஞ்சையில் திடீர் மழை
Published on

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.தஞ்சை மாவட்டத்தில் மழை பெய்யும் என அறிவிக்கப்படவில்லை என்றாலும் நேற்றுஇரவு 7 மணிக்கு மேல் திடீரென குளிர்ந்த காற்று வீச தொடங்கியது.

இதனால் மழை பெய்யுமோ? என மக்கள் எதிர்பார்த்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் சிறிது நேரத்தில் திடீரென மழை பெய்தது. இந்த மழை சிறிது நேரம் மட்டுமே பெய்தது. பின்னர் அவ்வப்போது லேசாக மழை தூறியது. இந்த மழையினால் பூமி நனைந்து இரவில் குளிர்ந்த காற்று வீசியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com