பள்ளிபாளையத்தில்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

பள்ளிபாளையத்தில்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
Published on

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் அன்னை சத்யா நகர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 28). தொழிலாளி. இவருடைய மனைவி சல்மா 23. இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து நேற்றும் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த குணசேகரன் வீட்டில் உள்ள விட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இறந்து விட்டார். இதுகுறித்து சல்மா பள்ளிபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com