ஏரியூர் அருகேசிப்ஸ் கடை ஊழியர் தற்கொலை

ஏரியூர் அருகேசிப்ஸ் கடை ஊழியர் தற்கொலை
Published on

ஏரியூர்:

ஏரியூர் அருகே சிப்ஸ் கடை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தொழிலாளி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 35). பெங்களூருவில் உள்ள சிப்ஸ் கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கும் தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே ஒரப்பாச்சியூர் பகுதியை சேர்ந்த பிரியா (27) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

ஸ்ரீதர் ஒரப்பாச்சியூர் பகுதியில் மனைவியுடன் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே நேற்றும் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

தற்கொலை

இதனால் பிரியா கோபித்து கொண்டு அதே பகுதியில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதையடுத்து வீட்டில் வைத்து மது குடித்த ஸ்ரீதர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ஏரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஸ்ரீதரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஏரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com