காவேரிப்பட்டணம் அருகேபெண் தீக்குளித்து தற்கொலை

காவேரிப்பட்டணம் அருகேபெண் தீக்குளித்து தற்கொலை
Published on

காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணம் அருகே குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

குடும்ப தகராறு

காவேரிப்பட்டணம் அருகே உள்ள மலைபையூர் பகுதியை சேர்ந்த சிலம்பரசன் மனைவி கோமதி (வயது 30). இவர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 8-ந் தேதி மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த கோமதி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

விசாரணை

இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கோமதியின் தந்தை சின்னச்சாமி கொடுத்த புகாரின்பேரில் காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com