பாப்பாரப்பட்டியில்என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை

பாப்பாரப்பட்டியில் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பாப்பாரப்பட்டியில்என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை
Published on

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டியில் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

என்ஜினீயர்

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி சுப்பிரமணிய சிவா காலனியை சேர்ந்தவர் லிங்கேஷ். இவருடைய மகன் சூரியபிரகாஷ் (வயது 24). என்ஜினீயரான இவர் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலயைல் சூரிய பிரகாஷ் பல்வேறு இடங்களில் கடன் வாங்கி அதனை திரும்ப செலுத்த முடியாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சமீபகாலமாக அவர் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.

தற்கொலை

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் கடந்த 12-ந் தேதி விஷம் குடித்து விட்டு தனது வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

எனினும் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சூரியபிரகாஷ் உயிரிழந்தார். தகவல் அறிந்து ஆஸ்பத்திரிக்கு சென்ற பாப்பாரப்பட்டி போலீசார் சூரியபிரகாசின் உடலை பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com