தேன்கனிக்கோட்டை அருகே டேங்க் ஆபரேட்டர் தூக்குப்போட்டு தற்கொலை

தேன்கனிக்கோட்டை அருகே டேங்க் ஆபரேட்டர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை தாலுகா இருதுகோட்டையை சேர்ந்தவர் மல்லப்பா (வயது 49). டேங்க் ஆபரேட்டர். இவருக்கு 2 மனைவிகள் உண்டு. முதல் மனைவி குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். மல்லப்பா 2-வது மனைவியுடன் இருந்து வந்தார். மல்லப்பாவிற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கும், 2-வது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மல்லப்பா நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com