எருமப்பட்டி அருகேதபால்காரர் விஷம் குடித்து தற்கொலை

எருமப்பட்டி அருகேதபால்காரர் விஷம் குடித்து தற்கொலை
Published on

எருமப்பட்டி:

எருமப்பட்டி அருகே உள்ள கோடங்கிபட்டியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 63). தபால்காரர். இந்த நிலையில் சண்முகத்துக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த சண்முகம் கடந்த 8-ந் தேதி விஷம் குடித்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை சண்முகம் இறந்தார். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com