கம்பைநல்லூர் அருகேதொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

கம்பைநல்லூர் அருகேதொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
Published on

மொரப்பூர்:

தர்மபுரி மாவட்டம் இருமத்தூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 33) தொழிலாளி. இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பின்னர் இவருடைய மனைவி ஒரு ஆண்டுக்கும் மேலாக பெற்றோர் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சோகமாக காணப்பட்ட வெங்கடாசலம் வீட்டில் விஷம் குடித்து இறந்து கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய பெற்றோர், இதுகுறித்து கம்பைநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், வெங்கடாசலத்தின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவருடைய தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com