பென்னாகரம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை

பென்னாகரம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

பென்னாகரம்:

பென்னாகரம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெயிண்டர்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள மாங்கரையை சேர்ந்தவர் கோவிந்தராஜ். பெயிண்டர். இவருடைய மனைவி சத்யா (வயது 32). இவர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில் சில நாட்களாக கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த சத்யா வீட்டில் யாரும் இல்லாதபோது கேபிள் ஒயரால் தூக்குப்போட்டு கொண்டார்.

விசாரணை

இதை பார்த்த கோவிந்தராஜ் மனைவி சத்யாவை மீட்டு பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சத்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் சத்யாவின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது சகோதரர் மாதையன் பென்னாகரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com