புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை

புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை
புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை
Published on

பொள்ளாச்சி

பொள்ளாச்சி நடராஜ் மணியகாரர் காலனியை சேர்ந்தவர் அய்யப்பா (வயது 23). இவருடைய மனைவி கமலி (20). இவர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இதற்கிடையில் அய்யப்பா தனது திருமணத்திற்காகவும், வீடு கட்டுவதற்கும் சிலரிடம் கடன் பெற்றதாக தெரிகிறது. ஆனால் அதன்பிறகு கடனை திரும்ப செலுத்த முடியாததால் மன உளைச்சலில் இருந்தார்.

இந்த நிலையில் அய்யப்பா, தனது மனைவி கமலியை அவரது பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு, வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு தனது வீட்டிற்கு வந்தார். இதற்கிடையில் வெளியே சென்றிருந்த அவரது தாய் திரும்பி வந்து கதவை தட்டி பார்த்தும் திறக்காததால், ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார். அப்போது அய்யப்பா தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். உடனே அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தார். அவர்கள் வீட்டின் ஓடுகளை பிரித்து உள்ளே இறங்கி அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அய்யப்பா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com