வாள் சண்டை பயிற்சி

கண்ணமங்கலம் அரசு பள்ளியில் வாள் சண்டை பயிற்சி தொடங்கப்பட்டது.
வாள் சண்டை பயிற்சி
Published on

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வாள் சண்டை பயிற்சி இன்று தொடங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் கருணாநிதி முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் உடற்கல்வி இயக்குனர் கார்த்திகேயன், உடற்பயிற்சி ஆசிரியர்கள் அமுதா, அன்புக்கரசு மற்றும் குழுவினர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு 3 விதமான வாள் சண்டை பயிற்சியை தொடங்கி வைத்தனர்.

இதில் உதவி தலைமை ஆசிரியர்கள் சாந்தி, தசக்குமார், ஆசிரியர்கள் உள்பட பலர் வாழ்த்தி பேசினர்.

முடிவில் ஆசிரியர் சுப்பிரமணி நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com