தாம்பரம்-விழுப்புரம் பயணிகள் ரெயில் பகுதி நேர ரத்து

கோப்புப்படம்
தாம்பரம்-விழுப்புரம் பயணிகள் ரெயில் பகுதி நேர ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள முண்டியம்பாக்கம் பணிமனையில் வருகிற 28-ந்தேதி மதியம் 12.50 மணி முதல் மாலை 4.20 வரையில் (3 மணி நேரம் 30 நிமிடம்) பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
அதன்படி, தாம்பரத்தில் இருந்து வருகிற 28-ந்தேதி காலை 9.45 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் செல்லும் பயணிகள் ரெயில் (வண்டி எண்.66045), திண்டிவனம்-விழுப்புரம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.
விழுப்புரத்தில் இருந்து வருகிற 28-ந்தேதி மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் பயணிகள் ரெயில் (66046), விழுப்புரம்-திண்டிவனம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






