வேல்யாத்திரையின் 2ஆவது நாளிலும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கைது

வேல்யாத்திரையின் 2ஆவது நாளிலும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலரை போலீசார் கைது செய்தனர்.
வேல்யாத்திரையின் 2ஆவது நாளிலும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கைது
Published on

சென்னை,

திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர் 8 ஆம் தேதி முதல் டிசம்பர் 6 ஆம் தேதி வரை பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வேல் யாத்திரைக்கு தடை விதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், வேல் யாத்திரை நடத்த தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில் கடந்த 6 ஆம் தேதி தடையை மீறி வேல் யாத்திரை நடத்தியதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உட்பட நிர்வாகிகள் பலரை திருத்தணியில் போலீசார் தடுத்து நிறுத்தி, கைது செய்து பின்னர் விடுவிக்கப்பட்டனர். ஆனால், தடையை மீறி தமிழகம் முழுவதும் வேல் யாத்திரை தொடரும் என எல்.முருகன்அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இரண்டாவது நாள் யாத்திரையை இன்று சென்னை திருவொற்றியூரில் இருந்து கோயம்பேடு வரை யாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் இருந்து எல்.முருகன் தலைமையில் வேல் யாத்திரை தொடங்கியது. அப்போது போலீசார் யாத்திரையை தடுத்து நிறுத்தினர். யாத்திரையில் பங்கேற்ற எல்.முருகன், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com