தமிழ்நாடு அரசின் விருதுகள் - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்தது.
தமிழ்நாடு அரசின் விருதுகள் - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
Published on

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழ்நாடு அரசின் பல்வேறு விருதுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2024ஆம் ஆண்டுக்கான அய்யன் திருவள்ளுவர் விருது தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிக்கு வழங்கப்பட்டது .

2023ஆம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது பத்தமடை பரமசிவத்திற்கும் , பெருந்தலைவர் காமராஜர் விருது .உ. பலராமனுக்கும் வழங்கப்பட்டது.

மகாகவி பாரதியார் விருது கவிஞர் பழநிபாரதிக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது எழுச்சிக் கவிஞர் ம. முத்தரசுக்கும், தமிழ்த்தென்றல் வி.க. விருது பேராசிரியர் எஸ். ஜெயசீல ஸ்டீபனுக்கும் , முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது முனைவர் கருணாநிதிக்கும் வழங்கப்பட்டது.

2023ஆம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது தமிழ்நாடு அரசின் சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் .சுப.வீரபாண்டியனுக்கும், டாக்டர் அம்பேத்கர் விருது பி. சண்முகத்திற்கும் வழங்கப்பட்டது..

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com