மணிமுக்தா நதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவு

மணிமுக்தா நதி அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மணிமுக்தா நதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவு
Published on

கள்ளக்குறிச்சி,

மணிமுக்தா நதி அணையிலிருந்து இன்று(6.12.2024) முதல் தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்;

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மணிமுக்தா நதி அணையிலிருந்து இன்று (06.12.2024) முதல் 25.02.2025 வரை 82 நாட்களுக்கு 556.26 (590.00- 33.74 = 556.26) மில்லியன் கனஅடி மிகாமல் தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்தில் உள்ள 4,250 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com