

ஊரடங்கு தளர்வுகளை சரியாக புரிந்துகொள்ளாமல் அனைத்து இடங்களிலும் மக்கள் முக கவசம் அணியாமல் கூட்டம் கூட்டமாக வலம் வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. இது மிகவும் அபாயகரமான விஷயம். அடுத்த மாதம் கொரோனா 3-வது அலை தொடங்க வாய்ப்பு இருப்பதாக வல்லுநர் குழு தெரிவித்துள்ளது. மேலும் 3-வது அலை செப்டம்பர் மாதத்தில் மிகப்பெரிய அளவில் உச்சம் பெறும் என கூறப்பட்டுள்ளதால், மக்கள் அனைவரும் தற்போதிலிருந்தே விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.
3-வது அலை மக்களை தாக்காமல் இருக்க அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றினால் மட்டுமே 3-வது அலையில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும். 3-வது அலையில் இருந்து மக்களையும், நாட்டையும் பாதுகாக்க வேண்டுமென்றால், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு கடுமையாக்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான் வீட்டுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.